என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கனிமொழி எம்பி
தொலைநோக்கு பார்வை இல்லாமல் மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது- கனிமொழி எம்.பி.
By
மாலை மலர்29 Aug 2019 10:35 AM GMT (Updated: 29 Aug 2019 10:35 AM GMT)

மத்திய அரசு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தாமல், தொலைநோக்கு பார்வை இல்லாமல் ஆட்சி செய்து வருகிறது என்று கனிமொழி எம்.பி.குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் எந்தவித தொழில் வளர்ச்சியோ, வெளிநாட்டு முதலீடுகளோ இல்லாத நிலை உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை பார்க்க முடிகிறது. வேலையில்லா திண்டாட்டம் மக்களை பாதித்து உள்ளது. இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. கடந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டு இருந்த போதும், அப்போதைய மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தாமல், தொலைநோக்கு பார்வை இல்லாமல் ஆட்சி செய்து வருகிறது.
ரிசர்வ் வங்கியின் உபரிநிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ஏற்கனவே இதுபோன்று ரிசர்வ் வங்கியின் நிதியை பயன்படுத்திய சில நாடுகள் எந்த அளவுக்கு பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. ஆகையால், இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்துவது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். இந்திய அளவில் உள்ள பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பணிகளை பார்த்து பெருமைப்படுகிறேன். தமிழகத்தில் பல மாநாடுகளை நடத்தி ஒன்றும் செய்ய முடியாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு சென்று என்ன செய்யப்போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் எந்தவித தொழில் வளர்ச்சியோ, வெளிநாட்டு முதலீடுகளோ இல்லாத நிலை உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை பார்க்க முடிகிறது. வேலையில்லா திண்டாட்டம் மக்களை பாதித்து உள்ளது. இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. கடந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டு இருந்த போதும், அப்போதைய மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தாமல், தொலைநோக்கு பார்வை இல்லாமல் ஆட்சி செய்து வருகிறது.
ரிசர்வ் வங்கியின் உபரிநிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ஏற்கனவே இதுபோன்று ரிசர்வ் வங்கியின் நிதியை பயன்படுத்திய சில நாடுகள் எந்த அளவுக்கு பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை பார்க்க முடிகிறது. ஆகையால், இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்துவது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். இந்திய அளவில் உள்ள பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பணிகளை பார்த்து பெருமைப்படுகிறேன். தமிழகத்தில் பல மாநாடுகளை நடத்தி ஒன்றும் செய்ய முடியாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு சென்று என்ன செய்யப்போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
