என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோபி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
கோபி:
கோபியை அடுத்த அளுக்குளி , மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி நித்திய பிரியா (வயது 20). சீனிவாசனுக்கும் நித்திய பிரியாவுக்கும் திருமணம் ஆகி மூன்று மாதம் தான் ஆகிறது. கணவன் - மனைவி இருவரும் மகாலட்சுமி நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை சீனிவாசன் வேலை விஷயமாக வெளியே சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பி வந்தார். வீட்டின் கதவை தட்டினார். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சீனிவாசன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் நித்திய பிரியா தூக்குபோட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சீனிவாசன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நித்தியபிரியா தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கடத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நித்திய பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நித்திய பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சீனிவாசனுக்கும் நித்திய பிரியாவுக்கும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் கோபி கோட்டாட்சியர் ஜெயராமனும், சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா ஆகியோரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்