என் மலர்

    செய்திகள்

    பிணமாக கிடந்த மூதாட்டி ராஜம்மாள்
    X
    பிணமாக கிடந்த மூதாட்டி ராஜம்மாள்

    பாரூர் அருகே கோவிலுக்கு சென்ற மூதாட்டி ஆற்றில் பிணமாக மீட்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாரூர் அருகே கோவிலுக்கு சென்ற மூதாட்டி தென்பெண்ணை ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    தருமபுரி மாவட்டம், ஒடசல்பட்டியை அடுத்துள்ள சென்னேனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது65). இவர் கடந்த 27-ந்தேதி அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள பண்ணந்தூர் காளியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. 

    இந்தநிலையில் நேற்றிரவு மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ராஜம்மாள் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து பொதுமக்கள் அரசம்பட்டி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றில் அழுகிய நிலையில் ராஜம்மாள் உடல் கிடந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் மூதாட்டி ராஜம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×