என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்திய 3 வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்27 May 2019 1:10 PM GMT (Updated: 27 May 2019 1:10 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்திய 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை செல்வி தலைமையிலான போலீசார், சின்னபூங்குந்தி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சின்னபூங்குந்தி பகுதியில் இருந்து தேசப்பள்ளிக்கு, ஒரு யூனிட் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சூளகிரி போலீஸ் நிலைய ஏட்டு அசோகன் மற்றும் போலீசார், காலிங்கவரம் கூட்டுரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் பஸ்தலப்பள்ளி பகுதியில் இருந்து, கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் 2 யூனிட் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மல்லப்புரம் பகுதியை சேர்ந்த டிரைவர் வேலு (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான போலீசார், அஞ்செட்டி ஏரி அருகே ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தினர். ஆனால் வேனில் வந்த நபர்கள் வண்டியை நிறுத்தி விட்டு தப்பியோடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனில் சோதனை செய்தனர்.
அதில் அரை யூனிட் மணல் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மணலுடன் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டிரைவர் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X