search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை கூடல்புதூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை
    X

    மதுரை கூடல்புதூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை

    மதுரை கூடல்புதூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கூடல்புதூரில் உள்ள செல்லையா நகரைச் சேர்ந்தவர் செல்வன் தினேஷ் டேவிட்சன் (வயது51). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவுக்குள் இருந்த 30 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    மாலையில் வீடு திரும்பிய செல்வன்தினேஷ் டேவிட்சன், கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×