search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியபாளையம் அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலி
    X

    பெரியபாளையம் அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலி

    மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள பேட்டை மேடு கிராமம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் தரணி (வயது 35). தனியார் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மனைவியும், 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் தரணி பெரியபாளையத்தில் இருந்து வடமதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பெரியபாளையம்- வெங்கல் நெடுஞ்சாலையில் பேட்டை மேடு கிராமம் சர்ச் அருகே சென்ற போது திடீரென சாலையில் குறுக்கே மாடு ஒன்று வந்தது. இதனால் தரணி மோட்டார் சைக்கிளில் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய தரணி மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×