என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியபாளையம் அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலி
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள பேட்டை மேடு கிராமம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் தரணி (வயது 35). தனியார் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மனைவியும், 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் தரணி பெரியபாளையத்தில் இருந்து வடமதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பெரியபாளையம்- வெங்கல் நெடுஞ்சாலையில் பேட்டை மேடு கிராமம் சர்ச் அருகே சென்ற போது திடீரென சாலையில் குறுக்கே மாடு ஒன்று வந்தது. இதனால் தரணி மோட்டார் சைக்கிளில் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய தரணி மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரணி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்