search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை எல்லீஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    மதுரை எல்லீஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

    மதுரை எல்லீஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி மும்தாஜ்பேகம் (வயது 46). இவர் சம்பவத்தன்று 2-வது பால்பூத் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மும்தாஜ்பேகத்தை பின் தொடர்ந்து வந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் மும்தாஜ்பேகத்தை வழிமறித்து அவரிடம் இருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து மும்தாஜ்பேகம் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×