search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிழக்கு கடற்கரை சாலையில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: போலீஸ்காரர் பலி
    X

    கிழக்கு கடற்கரை சாலையில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: போலீஸ்காரர் பலி

    கிழக்கு கடற்கரை சாலையில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதலில் போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    பனையூர் பகுதியில் வசித்து வந்தவர் நெல்சன் (வயது27). இவர் டெல்லி சிறப்பு காவல் படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார்.

    விடுமுறையையொட்டி நெல்சன் பனையூரில் உள்ள வீட்டுக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் அவர் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டெம்போ வேன் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே நெல்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×