search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலாற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது
    X

    பாலாற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது

    பாலாற்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு மாதனூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது அனுமதியின்றி பாலாற்றில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரி உரிமையாளர் திருமலை குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது31). லாரி டிரைவர் மாதனூர் அடுத்த ஆர்பட்டியை சேர்ந்த பாரத்(28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×