என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்
Byமாலை மலர்26 Feb 2019 4:22 PM GMT (Updated: 26 Feb 2019 4:22 PM GMT)
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #TNFishermen #EdappadiPalanisamy #PMModi
சென்னை:
தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடிக்கின்றனர் எனக்கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.
மேலும், அவர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்கின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டுமென மீனவ அமைப்புகள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 46 மீனவர்கள் மற்றும் 26 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக வெளியுறவுத்துறை மூலம் உடனடியாக பேசி தீர்வு ஏற்படுத்த வேண்டும். மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். #TNFishermen #EdappadiPalanisamy #PMModi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X