search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்
    X

    இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #TNFishermen #EdappadiPalanisamy #PMModi
    சென்னை:

    தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடிக்கின்றனர் எனக்கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.

    மேலும், அவர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்கின்றனர்.  இதற்கு தீர்வு காண வேண்டுமென மீனவ அமைப்புகள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற 46 மீனவர்கள் மற்றும் 26 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக வெளியுறவுத்துறை மூலம் உடனடியாக பேசி தீர்வு ஏற்படுத்த வேண்டும். மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். #TNFishermen #EdappadiPalanisamy #PMModi
    Next Story
    ×