search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரியில் தொடரும் தர்ணா- பேச்சுவார்த்தை நடத்த வரும்படி முதல்வருக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு
    X

    புதுச்சேரியில் தொடரும் தர்ணா- பேச்சுவார்த்தை நடத்த வரும்படி முதல்வருக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு

    புதுச்சேரியில் போராட்டம் நடத்தி வரும் முதல்வர் மற்றும் அமைச்சர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி கவர்னர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார். #PuducherryCMDharna #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கவர்னரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் கவர்னர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.

    6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது. ஆனால் புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கவர்னர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. போராட்டமும் தீவிரமடைந்து நிலைமை மோசமடைந்தது. எனவே, கவர்னர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார். நேற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் நிபந்தனைகளை கவர்னர் ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.



    முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் 6-வது நாளாக  தொடரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார். #PuducherryCMDharna #KiranBedi
    Next Story
    ×