search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரும்பாக்கத்தில் மனைவி மீது மிளகாய் பொடி தூவி வெட்டி கொல்ல முயன்ற கணவர்
    X

    அரும்பாக்கத்தில் மனைவி மீது மிளகாய் பொடி தூவி வெட்டி கொல்ல முயன்ற கணவர்

    அரும்பாக்கத்தில் குடும்ப தகராறில் மனைவியை வெட்டி கொல்ல முயன்ற கணவர், தனது கையையும் அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போரூர்:

    அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தேவி (வயது36) இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    கருத்து வேறுபாட்டால் ரமேஷ் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை தேவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த ரமேஷ் மனைவி தேவியுடன் தகராறில் ஈடுபட்டார். திடீரென ரமேஷ் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தேவியை வெட்டினார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது ரமேஷ்- தேவி இருவரும் மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். ரமேசின் கையும் அறுக்கப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினர் வருவதை கண்டதும் ரமேசும் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய ரமேஷ், தேவியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தேவி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இன்று காலை வீட்டுக்கு வந்த ரமேஷ் ஆதார் கார்டு கேட்டுமனைவி தேவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில் தேவி மீது மிளகாய் பொடி தூவி கத்தியால் வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. #tamilnews
    Next Story
    ×