search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் அருகே வாலிபர் வி‌ஷம் குடித்து பலி
    X

    அரக்கோணம் அருகே வாலிபர் வி‌ஷம் குடித்து பலி

    அரக்கோணம் அருகே வாலிபர் வி‌ஷம் குடித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கோலம்:

    அரக்கோணம் அருகே உள்ள வேடல் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் சத்யா (வயது20). இவர் நேற்று வி‌ஷம் குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து சத்யாவை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா இறந்தார். இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சத்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×