என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி அருகே மணல் திருட்டை தடுத்த தாசில்தாருக்கு கொலை மிரட்டல்
Byமாலை மலர்12 Dec 2018 9:59 AM GMT (Updated: 12 Dec 2018 9:59 AM GMT)
போடி அருகே மணல் திருட்டை தடுத்த தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஆற்றங்கரை பகுதியில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் தினசரி ரோந்து மேற்கொண்டு மணல் திருடும் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுத்தாலும் மணல் கடத்தலை தடுக்க முடிவதில்லை.
கொட்டக்குடி ஆறு பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது அனுமதியின்றி 2 டிராக்டர்களில் மணல் அள்ளி வந்ததை கண்டறிந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி டிராக்டரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
மேலும் மணல் திருட்டு குறித்து ஆய்வுக்கு சென்ற தாசில்தார் ஆர்த்தியை ஒரு கும்பல் மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து 6 மாட்டு வண்டிகளில் மணல் திருடி வந்ததை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X