search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு மத்திய அரசின் அடிமையாக செயல்பட்டு வருகிறது- கருணாஸ்
    X

    தமிழக அரசு மத்திய அரசின் அடிமையாக செயல்பட்டு வருகிறது- கருணாஸ்

    தமிழக அரசு மத்திய அரசின் அடிமையாக செயல்பட்டு வருகிறது என்று கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார். #GajaCyclone #Karunas #tamilnadugovt #Centralgovt
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் உள்ள மக்களுக்கு நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர்கள் கஜா புயலால் முகாம்களில் அகதிகளாக அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை . எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை . ஆகையால் எனது நண்பர் சார்பில் லண்டனில் இருந்து பொருட்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.


    தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசின் அடிமையாக செயல்பட்டு வருகிறது. கேரளாவுக்கு ஒரு நீதி , தமிழகத்துக்கு ஒரு நீதி என்று பிரதமர் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

    அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசனை செய்து வருகிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றேன். ஆனால் அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. கமி‌ஷன் பெற்றுக்கொண்டு தான் எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும் என்ற விதி தமிழகத்தில் உள்ளதால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழக அரசை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Karunas #tamilnadugovt #Centralgovt
    Next Story
    ×