என் மலர்
செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து: சலவை தொழிலாளி பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகன்கள் ராமர் (வயது 28), கருப்பசாமி (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (35). இவர்கள் 3 பேரும் சலவை தொழிலாளிகள்.
இன்று காலை 3 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சலவை செய்த துணிகளை எடுத்துக்கொண்டு ராஜபாளையம் சத்திரப்பட்டிக்கு சென்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் -ராஜபாளையம் சாலையில் தியேட்டர் அருகே சென்ற போது சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
ராமர் மற்றும் தங்கப்பாண்டி காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வேன் டிரைவர் குமார் கைது செய்யப்பட்டார்.