என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வந்தவாசி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்
Byமாலை மலர்25 Oct 2018 10:12 AM GMT (Updated: 25 Oct 2018 10:12 AM GMT)
காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வந்தவாசி:
சென்னை மணலியை சேர்ந்தவர் மதுசூதனன் மகள் மோனிஷா (வயது 20). இவரும் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தை சேர்ந்த எழிலரசன் (வயது 25) என்பவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு சாலவேடு கிராமத்திலேயே 2பேரும் வசித்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மோனிஷா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கியிருந்தார்.
சமீபத்தில் கணவன் வீட்டிற்கு வந்த மோனிஷாக்கு மீண்டும் உடல்நிலை பாதித்தது. நேற்று வீட்டிலிருந்த அவர் திடீரென உயிரிழந்தார்.
மோனிஷாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் கீழ் கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் மோனிஷாவின் உடலை மீட்டு கணவர் எழிலரசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X