என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராயபுரத்தில் பெண் படுகொலையால் பொதுமக்கள் அதிர்ச்சி - போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
ராயபுரம்:
சென்னை ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களது 16 வயது மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத்குமார் (26) என்பவர் ஈவ்டீசிங் செய்துள்ளார்.
இதுபற்றி ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பக்டர் ராஜா ராபர்ட், ஈவ்டீசிங் புகாருக்குள்ளான வினோத்குமாரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டித்து அனுப்பி வைத்துள்ளார்.
இந்தநிலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய பிரேம் குமாருக்கு, மகள் ஈவ்டீசிங் செய்யப்பட்டது பற்றிய தகவல் தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வினோத் குமார் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுமோதலாக மாறியது. வினோத் குமார் தன் மீது தவறு இருப்பதை மறந்து விட்டு பிரேம்குமாரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான பிரேம்குமார் பாரிமுனை பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் அங்கிருந்து திரண்டு வந்தனர். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்று வினோத்குமாரை கண்டித்தனர். இதனால் மீண்டும் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், ரகளையில் ஈடுபட தொடங்கினார்.
இதுமிகப்பெரிய மோதலாக மாறியது. வினோத் குமார் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பிரேம்குமாரின் உறவினர் களை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது உறவுக்கார பெண் மேரிக்கு கத்திகுத்து விழுந்தது.
இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மேரியின் தங்கை மெர்லின், பிரேம் குமார் ஆகியோர் வினோத் குமாரை தடுத்தனர். இதில் அவர்களுக்கும் கத்திகுத்து விழுந்தது. உடனடியாக மேரி உள்ளிட்ட 3 பேரும் ஸ்டேன்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈவ்டீசிங் கொடுமைக்குள்ளான பெண்ணின் தாய் பரமேஸ்வரி அளித்த புகாரில் வினோத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மோதல் சம்பவம் நடந்திருக்காது என்றும் அநியாயமாக அப்பாவிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்றும் ஆத்திரப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் மீது பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் சரியாக செயல்படவில்லை என்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
வடசென்னை கூடுதல் கமிஷனர் தினகரன், இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோரது மேற் பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் முடிவில் முதலில் புகார் அளித்தபோதே வினோத்குமார் மீது இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கொலையை தடுத்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக வினோத்குமார், அவரது தம்பி தமிழ், உறவினர் சங்கர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் வினோத் குமாரின் மனைவி விஜய லட்சுமியும் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் கவனக் குறைவான பணியால் பெண் ஒருவர் கொலையுண்ட சம்பவத்தால் ராயபுரத்தில் பதட்டம் நிலவுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்