search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தோடு அருகே மொபட் விபத்தில் தொழிலாளி பலி
    X

    சித்தோடு அருகே மொபட் விபத்தில் தொழிலாளி பலி

    சித்தோடு அருகே மொபட் விபத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பவானி:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50). தொழிலாளி.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தோடு நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மொபட்டில் ராமசாமி உள்பட 3 பேர் இருந்தனர். சித்தோடு அருகே உள்ள அமராவதி நகர் பக்கம் சென்றபோது அந்த வழியாக நடந்து சென்ற கோமதி என்ற பெண் மீது மொபட் மோதியது.

    இதில் நிலை தடுமாறி ஓடிய மொபட்டில் இருந்து ராமசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனளிக்காமல் ராமசாமி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீஸ் இன்ஸ் பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×