என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே 3 குழந்தைகளின் தாய் கடத்தல்- போலீசில் கணவர் புகார்
Byமாலை மலர்10 Oct 2018 11:59 AM GMT (Updated: 10 Oct 2018 11:59 AM GMT)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 3 குழந்தைகளின் தாய் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள எஸ்.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது மனைவி ஜெயா (வயது 32). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
சுப்பிரமணியின் நண்பர் மருதுபாண்டி. இவர் அடிக்கடி வந்து சென்ற போது ஜெயாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயா கட்டிட வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். அதில், தனது மனைவி கடத்தப்பட்டு உள்ளதாகவும் அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள எஸ்.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது மனைவி ஜெயா (வயது 32). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
சுப்பிரமணியின் நண்பர் மருதுபாண்டி. இவர் அடிக்கடி வந்து சென்ற போது ஜெயாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயா கட்டிட வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். அதில், தனது மனைவி கடத்தப்பட்டு உள்ளதாகவும் அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X