என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
எதிரிகளை விட உதிரிகளால் தான் நமக்கு பிரச்சனை- அமைச்சர் உதயகுமார்
திருப்பரங்குன்றம் தொகுதியில் எதிரிகளை விட உதிரிகளால் தான் நமக்கு பிரச்சனை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் மாநகராட்சி காலனி அருகே தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. பகுதி கழகம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளர் முத்துராம லிங்கம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து ஆகியோர் கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-
தேர்தல் பணியிலே கவனமாக கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும், அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு விளக்கி கூற வேண்டும்.
சுவர் விளம்பரம் செய்ய கட்டுப்பாடுகள் கிடையாது. எனவே அரசின் சாதனைகளை விளம்பரம் செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அவனியாபுரம் பகுதியில் தான் அ.தி.மு.க.விற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
சட்டமன்ற பொது தேர்தல் நடந்தபோது 22ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சீனிவேல் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் ஏ.கே. போஸ். 43 ஆயிரம் வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றார்.
இதே போல் வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற பூத் கமிட்டிக்கு 200 பேருக்கு, 6 பேர் தேர்ந்தெடுத்து அந்த பகுதியிலேயே காலை, மாலை என வாக்காளர்களை சந்திக்க வேண்டும். நமக்கு எதிரிகள் கூட பிரச்சனை இல்லை. நம்மிடமிருந்து பிரிந்த உதிரிகள் தான் பிரச்சனை, அவர்களை பற்றி கவலை வேண்டாம். அவர்கள் தலைக்கு மேலே கத்தி தொங்குகிறது. வருபவர்கள் தேர்தலுக்கு முன்பு வாருங்கள் ஏற்றுக்கொள்வோம்.
தேர்தலுக்கு பின் தோல்வியுற்று வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
கூட்டத்தில் எம்.எஸ். பாண்டியன், சரவணன், மாணிக்கம், பெரிய புள்ளான், இளைஞரணி மாவட்டச் செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், நிர்வாகிகள் முத்துக்குமார், வெற்றிவேல், தமிழரசன், மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் மாநகராட்சி காலனி அருகே தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. பகுதி கழகம் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமைப்புச் செயலாளர் முத்துராம லிங்கம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து ஆகியோர் கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-
தேர்தல் பணியிலே கவனமாக கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும், அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு விளக்கி கூற வேண்டும்.
சுவர் விளம்பரம் செய்ய கட்டுப்பாடுகள் கிடையாது. எனவே அரசின் சாதனைகளை விளம்பரம் செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அவனியாபுரம் பகுதியில் தான் அ.தி.மு.க.விற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
சட்டமன்ற பொது தேர்தல் நடந்தபோது 22ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சீனிவேல் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் ஏ.கே. போஸ். 43 ஆயிரம் வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றார்.
இதே போல் வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற பூத் கமிட்டிக்கு 200 பேருக்கு, 6 பேர் தேர்ந்தெடுத்து அந்த பகுதியிலேயே காலை, மாலை என வாக்காளர்களை சந்திக்க வேண்டும். நமக்கு எதிரிகள் கூட பிரச்சனை இல்லை. நம்மிடமிருந்து பிரிந்த உதிரிகள் தான் பிரச்சனை, அவர்களை பற்றி கவலை வேண்டாம். அவர்கள் தலைக்கு மேலே கத்தி தொங்குகிறது. வருபவர்கள் தேர்தலுக்கு முன்பு வாருங்கள் ஏற்றுக்கொள்வோம்.
தேர்தலுக்கு பின் தோல்வியுற்று வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
கூட்டத்தில் எம்.எஸ். பாண்டியன், சரவணன், மாணிக்கம், பெரிய புள்ளான், இளைஞரணி மாவட்டச் செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், நிர்வாகிகள் முத்துக்குமார், வெற்றிவேல், தமிழரசன், மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #Udhayakumar #TTVDhinakaran
Next Story






