search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணை
    X

    சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணை

    சென்னையில் இன்று திறக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு முதல் வழக்காக விசாரிக்கப்பட்டது. #SpecialCourt #MKStalinCase
    சென்னை:

    எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.  

    அவ்வகையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றத்துக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாடி ரமேஷ் திறந்து வைத்தார்.

    இதையடுத்து இந்த சிறப்பு  நீதிமன்றத்தில் முதல் வழக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதாவது 2011-ல் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று முதல் வழக்காக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர் அந்த வழக்கின் விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #SpecialCourt #MKStalinCase
    Next Story
    ×