search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே ஓடும் பஸ்சில் நகை- பணத்தை திருடிய 3 பெண்கள் கைது
    X

    ஒரத்தநாடு அருகே ஓடும் பஸ்சில் நகை- பணத்தை திருடிய 3 பெண்கள் கைது

    ஒரத்தநாடு அருகே ஓடும் பஸ்சில் நகை மற்றும் பணத்தை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நெசலிங்கப்பா. இவரது மனைவி திலகா.

    இந்த நிலையில் நேற்று திலகா ஒரத்தநாடு கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றார். அங்கு கொலுசு வாங்கி விட்டு ஒரத்தநாடு- மன்னார்குடி டவுன் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

    பின்னர் அவர் சாவடி பஸ் நிறுத்தத்தில் திலகா பஸ்சை விட்டு இறங்கிய போது தான் கொலுசு மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் வைத்திருந்த கைபையை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். மேலும் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் கூச்சல் போட்டதால் பஸ்சில் இருந்தவர்கள் பஸ்சை நிறுத்த கூறினர். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த 3 பெண்களை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள், திலகாவிடம் நகை- பணத்தை திருடியதை ஒப்பு கொண்டனர். இதையடுத்து அந்த 3 பெண்களையும் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் 3 பெண்களும் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைதான 3 பெண்களும் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. மேலும் பிடிபட்ட 3 பெண்களும் தங்களது பெயர்களை மாற்றி மாற்றி கூறி வருவதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×