search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே குடிபோதையில் ஆற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி பலி
    X

    ஒரத்தநாடு அருகே குடிபோதையில் ஆற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி பலி

    குடிபோதையில் நடந்து சென்ற தொழிலாளி ஆற்றுக்குள் தவறி விழுந்த பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). துப்புரவு பணியாளர். மது குடிக்கும் பழக்கம் உடையவர்.

    நேற்று கல்லணை கால்வாய், அலிவலம் பிரிவு வாய்க்கால் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் மது குடித்து விட்டு கல்லணை கால்வாய் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென போதையில் நிலைதடுமாறி ஆற்றுக்குள் தவறி விழுந்தார். ஆற்றில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருந்ததால் முருகன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். 

    இதைப் பார்த்த அருகில் இருந்த சிலர் ஆற்றில் குதித்து அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து தஞ்சை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் தேடுதலுக்கு பின்பு முருகன் விழுந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அவரது உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×