என் மலர்
செய்திகள்

கோவையில் ரூ.2½ கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்திய வக்கீல் உள்பட 3 பேர் கைது
கோவை அருகே ரூ.2½ கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்தியது தொடர்பாக வக்கீல் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
கோவை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜாக்கோ பிடல் (வயது 45). தொழில்அதிபர்.
இவர் கன்னியாகுமரி, கோவை உள்பட பல மாவட்டங்களில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை பாப்ப நாயக்கன்பாளையயத்தில் அலுவலகம் அமைத்து தொழில் செய்து வருகிறார்.
நேற்று மதியம் அலுவலகத்துக்கு 10 பேர் கொண்ட கும்பல் கார்களில் வந்தனர். உருட்டு கட்டையால் அலுவலகத்தை சூறையாடிய கும்பல் அலுவலக ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் பெண் ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
பின்னர் கும்பல் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அங்கு ஜாக்கோ பிடல், அவரது நண்பர் மனோகரன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல் ஜாக்கோ பிடல்டிடம் ரூ.2½ கோடி பணம் கேட்டு கத்தி முனையில் மிரட்டினர்.
அவர் பணம் இல்லை என கூறவும் ஆவேசமடைந்த கும்பல் ஜான் கோ பிடலையும், மனோகரனையும் 2 கார்களில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த அலுவலக ஊழியர்களிடம் ரூ.2½ கோடி கொடுத்தால் இருவரையும் விட்டு விடுவோம், இல்லையென்றால் இருவரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அவர்களை கடத்தி சென்றனர்.
கும்பல் போகும் போது அலுவலகத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், 30 பவுன் நகைகள், 2 எல்.இ.டி. டி.வி.க் கள், 4 கம்ப்யூட்டர்கள், 2 பிரிண்டர்கள், காமிராக்கள், செல்போன்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துக் கொண்டனர். அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர்.
சம்பவஇடத்துக்கு சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்த னர். அதன்மூலம் ஜான் கோ பிடல், மனோகரன் ஆகியோரை கடத்தி சென்ற கார்களின் எண்களை கைப்பற்றி மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தினர்.
சிறிது நேரத்தில் மனோகரனை பீளமேடு பகுதியில் கடத்தி கும்பல் இறக்கி விட்டு சென்று விட்டனர். ஜாக்கோ பிடல்டை சேலத்தை நோக்கி கடத்தி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து சேலம், நாமக்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக காரில் சென்ற ஒரு கும்பலை நேற்று இரவு போலீசார் மடக்கினர். விசாரணையில் ஜாக்கோ பிடலை கடத்தியவர்கள் என்பது தெரிய வந்தது. காரில் இருந்த ஜாக்கோ பிடலை மீட்ட போலீசார் அவரை கடத்திய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் தர்மபுரி மாவட்டம் கம்பையநல்லூரை சேர்ந்த கார்த்திக் (வயது 36), ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்த வக்கீல் போஸ் முருகன்(37), சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்(25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்களுக்கும் ஜாக்கோ பிடல்டுக்கும் பணப் பிரச்சினை இருந்ததாகவும், ஜாக்கோ பிடல் பல மாதங்களாக பணம் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததால் ஆத்திரமடைந்து அவரை கடத்தியதாக கூறினர்.
இந்த சம்பவத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியை சேர்ந்த கரிகாலன் (40), அரூரை சேர்ந்த கோகுல் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜாக்கோ பிடல் (வயது 45). தொழில்அதிபர்.
இவர் கன்னியாகுமரி, கோவை உள்பட பல மாவட்டங்களில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை பாப்ப நாயக்கன்பாளையயத்தில் அலுவலகம் அமைத்து தொழில் செய்து வருகிறார்.
நேற்று மதியம் அலுவலகத்துக்கு 10 பேர் கொண்ட கும்பல் கார்களில் வந்தனர். உருட்டு கட்டையால் அலுவலகத்தை சூறையாடிய கும்பல் அலுவலக ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் பெண் ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
பின்னர் கும்பல் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அங்கு ஜாக்கோ பிடல், அவரது நண்பர் மனோகரன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல் ஜாக்கோ பிடல்டிடம் ரூ.2½ கோடி பணம் கேட்டு கத்தி முனையில் மிரட்டினர்.
அவர் பணம் இல்லை என கூறவும் ஆவேசமடைந்த கும்பல் ஜான் கோ பிடலையும், மனோகரனையும் 2 கார்களில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த அலுவலக ஊழியர்களிடம் ரூ.2½ கோடி கொடுத்தால் இருவரையும் விட்டு விடுவோம், இல்லையென்றால் இருவரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அவர்களை கடத்தி சென்றனர்.
கும்பல் போகும் போது அலுவலகத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், 30 பவுன் நகைகள், 2 எல்.இ.டி. டி.வி.க் கள், 4 கம்ப்யூட்டர்கள், 2 பிரிண்டர்கள், காமிராக்கள், செல்போன்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துக் கொண்டனர். அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர்.
சம்பவஇடத்துக்கு சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்த னர். அதன்மூலம் ஜான் கோ பிடல், மனோகரன் ஆகியோரை கடத்தி சென்ற கார்களின் எண்களை கைப்பற்றி மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தினர்.
சிறிது நேரத்தில் மனோகரனை பீளமேடு பகுதியில் கடத்தி கும்பல் இறக்கி விட்டு சென்று விட்டனர். ஜாக்கோ பிடல்டை சேலத்தை நோக்கி கடத்தி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து சேலம், நாமக்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக காரில் சென்ற ஒரு கும்பலை நேற்று இரவு போலீசார் மடக்கினர். விசாரணையில் ஜாக்கோ பிடலை கடத்தியவர்கள் என்பது தெரிய வந்தது. காரில் இருந்த ஜாக்கோ பிடலை மீட்ட போலீசார் அவரை கடத்திய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் தர்மபுரி மாவட்டம் கம்பையநல்லூரை சேர்ந்த கார்த்திக் (வயது 36), ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்த வக்கீல் போஸ் முருகன்(37), சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்(25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்களுக்கும் ஜாக்கோ பிடல்டுக்கும் பணப் பிரச்சினை இருந்ததாகவும், ஜாக்கோ பிடல் பல மாதங்களாக பணம் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததால் ஆத்திரமடைந்து அவரை கடத்தியதாக கூறினர்.
இந்த சம்பவத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியை சேர்ந்த கரிகாலன் (40), அரூரை சேர்ந்த கோகுல் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






