என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானல் பகுதியில் 4 மணி நேரம் பலத்த மழை
பெருமாள்மலை:
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது இதமான சீசன் நிலவி வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கொடைக்கானலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அங்குள்ள அழகினை ரசித்து தங்களது செல்போன்களில் படம் எடுத்து மகிழ்கின்றனர்.
நேற்றுடன் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய கோடை விழா முடிவடைந்தது. ஆனாலும் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாலை நேரம் ஆனால் போதும் கரு மேகங்கள் சூழ்ந்து சிறிது நேரத்தில் மழை கொட்டித் தீர்த்து விடுகிறது.
நேற்று மாலையில் கன மழை பெய்தது. சுமார் 4 மணி நேரம் பெய்த மழையினால் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பள்ளங்கி, வில்பட்டி, பாம்பார்புரம், செண்பகனூர், பெருமாள்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீடித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேல்மலை கிராமங்களில் புதிதாக அருவிகள் உருவாகியுள்ளது. இதனை பார்ப்பவர்களுக்கு ரம்யமாக காட்சியளிக்கிறது. இந்த தண்ணீர் நீர் நிலைகளில் தேங்குவதால் விவசாயிகளும் தங்களது பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்