search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகனுக்கு தலையில் வெட்டு - ரத்தத்தை பார்த்த தாய் மயங்கி விழுந்து பலி
    X

    மகனுக்கு தலையில் வெட்டு - ரத்தத்தை பார்த்த தாய் மயங்கி விழுந்து பலி

    நெல்லையில், கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் தலையில் வெட்டு காயமடைந்த மகனை பார்த்த தாய் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த மாவடியை சேர்ந்தவர் சண்முகத்தாய்(வயது 56). இவரது மகன் ராமர்பாண்டியன்(26). இவர் நேற்று அப்பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சென்றார்.

    அப்போது இவருக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் கல்லால் ராமர் பாண்டியனை தாக்கினர். இதில் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தனது மகன் தலையில் ரத்தத்தை பார்த்த சண்முகத்தாய் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். ராமர்பாண்டியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    Next Story
    ×