என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

திருவாரூரில் நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் பெட்டிக்கடைக்காரர் கைது

திருவாரூர்:
திருவாரூரை சேர்ந்தவர் ராஜகணபதி (வயது 26). இவரும் குடவாசலை சேர்ந்த மாரிமுத்து (30) என்பவரும் இருசக்கர வாகன பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த பைனான்ஸ் நிறுவனம் மூலம் எண்கண்ணை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளார். அவர் அதற்கு செலுத்த வேண்டிய 4 மாத தவணை தொகையை கட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் மணிகண்டன் நேற்று திருவாரூரில் உள்ளது தனது நண்பர் ஜெயராஜ் என்பவர் பெட்டி கடைக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற ராஜகணபதியும், மாரி முத்தும், மணிகண்டனிடம் பணத்தை கட்டும்படி கூறியுள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மணிகண்டனும், ஜெயராஜும், ராஜகணபதியையும் மாரிமுத்துவையும் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றிய புகாரின்பேரில் திருவாரூர் டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரோண்யா வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தார். மேலும் தலைமறைவான மணிகண்டனை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
