என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
    X

    சீர்காழி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

    சீர்காழி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த நாதல் படுகையைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது31). விவசாயி.

    இவர் நேற்று இரவு நாதல்படுகையில் இருந்து சீர்காழி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×