என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் அருகே மணல் திருடிய 3 பேரை சிறை பிடித்த கிராம மக்கள்
Byமாலை மலர்12 May 2018 9:37 AM GMT (Updated: 12 May 2018 9:37 AM GMT)
காஞ்சீபுரம் அருகே நள்ளிரவில் மணல் திருடிய 3 பேரை கிராம மக்கள் சிறைப்பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த மாகரல் பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் மர்மமான முறையில் வேன் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.
வீட்டுக்கு வெளியே படுத்திருந்த கிராம மக்கள் சந்தேகமடைந்து வேனை மடக்கிப் பிடித்து பார்த்த போது அதில் ஆற்று மணல் திருடப்பட்டு எடுத்துச் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. வேனில் இருந்த 3 பேரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர்,
இது குறித்து மாகரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் 3 பேரையும் கைது செய்து வேனை பறிமுதல் செய்தார்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் இந்த 3 பேரில் ஒருவர் பழைய குற்றவாளி ஆவார். இவர்கள் மணல் திருடுவதற்கு வந்ததாகத் தெரியவில்லை. கொள்ளையடிப்பது போன்று வேறு நோக்கத்திற்காக வந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சீபுரம் அடுத்த மாகரல் பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் மர்மமான முறையில் வேன் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.
வீட்டுக்கு வெளியே படுத்திருந்த கிராம மக்கள் சந்தேகமடைந்து வேனை மடக்கிப் பிடித்து பார்த்த போது அதில் ஆற்று மணல் திருடப்பட்டு எடுத்துச் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. வேனில் இருந்த 3 பேரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்தனர்,
இது குறித்து மாகரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் 3 பேரையும் கைது செய்து வேனை பறிமுதல் செய்தார்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் இந்த 3 பேரில் ஒருவர் பழைய குற்றவாளி ஆவார். இவர்கள் மணல் திருடுவதற்கு வந்ததாகத் தெரியவில்லை. கொள்ளையடிப்பது போன்று வேறு நோக்கத்திற்காக வந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X