search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் 2-ம் கட்ட குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X

    கோவில்பட்டியில் 2-ம் கட்ட குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    கோவில்பட்டியில் ரூ.81.82 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்த 2-வது குடிநீர் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். #EdappadiPalanisamy
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.81.82 கோடி செலவில் 2-வது குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வந்தது. இன்று அந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களின் அத்தியாவசிய தேவைகளை அரசு நிறைவேற்றுகிறது. குடி மராமத்து திட்டத்தால் நல்ல பலன் கிடைத்துள்ளது. விவசாயிகளை காக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது.

    வீதிகளில் மூடப்படாமல் இருக்கும் குழாய்களை மூடி நீர் வீணாவதை பொதுமக்கள் தடுக்க வேண்டும். தங்கத்துக்கு இணையான தண்ணீரை வீணாக்க கூடாது. விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டுகுடிநீர் திட்டம் உருவாக்கப்படும்.  

    இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #EdappadiPalanisamy
    Next Story
    ×