search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான திருநங்கைகள்.
    X
    கைதான திருநங்கைகள்.

    அரக்கோணத்தில் ரெயில் பயணிகளிடம் பணம் பறித்த 8 திருநங்கைகள் கைது

    அரக்கோணத்தில் ரெயிலில் பயணிகளிடம் பணம் பறித்த திருநங்கைககள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இருந்து சென்னை, காட்பாடி, ரேணிகுண்டா ஆகிய மார்க்கங்களில் தினமும் ஏராளமான மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்று வருகிறது.

    ரெயில்களில் பயணிகளிடம் திருநங்கைகள் பணம் கேட்டு தொல்லை கொடுத்து பணம் பறித்து வருகின்றனர். இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு புகார்கள் வந்தது.

    அதன்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார்ரஜாக் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அசீஸ்குமார், ஏட்டு மகேந்திரன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அரக்கோணம் அருகே ரெயில்களில் சோதனை செய்தனர்.

    அப்போது பயணிகளிடம் பணம் கேட்டு இடையூறு செய்த காட்பாடி, வாலாஜா, சென்னை பகுதியை சேர்ந்த 8 திருநங்கைகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் திருநங்கைகளுக்கு அறிவுரைகள் கூறி ஜாமீனில் விடுவித்தனர்.

    வேலூர் ஆற்காடு ரோட்டில் ஆஸ்பத்திரிக்கு வரும் வெளிமாநில பயணிகளிடமும் திருநங்கைகள் சிலர் பணம் பறித்து வருகின்றனர். தினமும் இதுதொடர்ந்து நடக்கிறது. திருநங்கைகள் என்பதால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் புகார் கொடுப்பதில்லை.

    போலீசார் திருநங்கைகள் பணம் பறிப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


    Next Story
    ×