search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் நாளை 1.07 லட்சம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள்
    X

    தமிழ்நாட்டில் நாளை 1.07 லட்சம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள்

    தமிழ்நாட்டில் நாளை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வை எழுத 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 மாணவ- மாணவிகளுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #neetexam

    சென்னை:

    மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வை கடந்த ஆண்டு தமிழ் நாட்டில் 82 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

    அதாவது இந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 1 லட் சத்து 10 ஆயிரம் மாணவ- மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 மாணவ- மாணவிகளுக்கு தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    சென்னை, கோவை, காஞ்சீபும், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 10 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 149 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டன.

    இந்த ஆண்டு கூடுதலாக 25 ஆயிரத்து 206 பேர் தேர்வு எழுதுவதால் கடந்த ஆண்டை விட கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி இந்த ஆண்டு 170 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

    சென்னையில் அதிகபட்சமாக 33 ஆயிரத்து 842 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களுக்காக எழுத 49 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் 15,960 மாணவர்களுக்கு 32 மையங்கள், மதுரையில் 11 ஆயிரத்து 800 பேருக்கு 20 மையங்கள், நாமக்கல்லில் 5,560 பேருக்கு 7 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சேலத்தில் 17,461 மாணவர்களுக்கு 26 மையங்கள், திருச்சியில் 9420 பேருக்கு 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லையில் 4383 பேருக்கு 10 மையங்கள், வேலூரில் 9054 பேருக்கு 14 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்வு மையங்களில் இடம் கிடைக்காத மாணவ- மாணவிகள்தான் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்வு மையங்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு முழுமையாக தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வு மையத்தை அமைக்க முடியவில்லை என்று நீட் தேர்வு வாரியமும் விளக்கம் அளித்துள்ளது. #TamilNews #neetexam

    Next Story
    ×