search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் தொழிலாளியிடம் பணம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது
    X

    தூத்துக்குடியில் தொழிலாளியிடம் பணம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது

    மோட்டார் சைக்கிளில் வந்த தொழிலாளியிடம் பணம் மற்றும் செல்போனை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ஆதிநாராயணமூர்த்தி (வயது46). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியே வந்த 4 பேர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த பணம் ரூ.2500 மற்றும் செல்போன், வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். 

    இதுபற்றி மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து ஆதிநாராயணமூர்த்தியிடம் பணம், செல்போன் பறித்ததாக ரத்தினகணேஷ்(24), விஜயகுமார்(18) ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக தங்கவிஜய், பிரபு ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×