search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை வாங்கி தருவதாக ரூ. 50 லட்சம் மோசடி- நிதி நிறுவன அதிபர் கைது
    X

    வேலை வாங்கி தருவதாக ரூ. 50 லட்சம் மோசடி- நிதி நிறுவன அதிபர் கைது

    சிவகங்கையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வசந்த நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நிதி நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு தமிழகம் முழுவதும் 81 கிளைகள் உள்ளன.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி கண்ணன்- சுகன்யா ஆகியோரிடம் தனது நிறுவனத்தில் மேலாளர், மண்டல மேலாளர் பதவி தருவதாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    அதற்கு பணம் தேவைப்படும் என்று தெரிவிக்கவே, கண்ணன்-சுகன்யா பல தவணைகளில் ரூ. 10 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    மாதங்கள் பல ஆகியும் ராதாகிருஷ்ணன் வேலை தரவிலலை. இதுகுறித்து பல முறை கேட்டபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கணவன் - மனைவி இருவரும் நேற்று காளையார் கோவிலுக்கு வந்து ராதாகிருஷ்ணனிடம் பணத்தை தருமாறு கேட் டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கண்ணன்-சுகன்யாவை ராதாகிருஷ்ணன் தரப்பினர் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    படுகாயம் அடைந்த சுகன்யா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வேலை தருவதாக 50-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 50 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
    Next Story
    ×