என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெரினா கடற்கரை சாலையில் அரை நிர்வாணத்துடன் சென்ற விவசாயி
Byமாலை மலர்2 May 2018 4:17 AM GMT (Updated: 2 May 2018 4:17 AM GMT)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மோட்டார் சைக்கிளில் அரை நிர்வாணத்துடன் சென்ற விவசாயியால் மெரினா கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. #CauveryManagementBoard #MarinaBeach
சென்னை:
கும்பகோணத்தை அடுத்த திருச்சேறை பகுதியை சேர்ந்தவர் புண்ணியகுமார்(வயது 48). இவர் சென்னை பழவந்தாங்கலில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்த அவர் விவசாயம் நலிவடைந்ததால் சென்னைக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று புண்ணியகுமார் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்பு அவர் திடீரென தனது மேலாடையை களைந்து, கோவணத்துடன் காந்தி சிலை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயத்தை காக்க வேண்டும் எனக்கூறி அவர் கோஷங்களை எழுப்பியபடி சென்றார்.
கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் இதை கூடி நின்று பார்த்தனர். இதைக்கண்ட போலீசார் காந்தி சிலை அருகே புண்ணியகுமாரை மடக்கிப்பிடித்து மெரினா போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்துவிட்டு அவரை அனுப்பி வைத்தனர். #CauveryManagementBoard #MarinaBeach
கும்பகோணத்தை அடுத்த திருச்சேறை பகுதியை சேர்ந்தவர் புண்ணியகுமார்(வயது 48). இவர் சென்னை பழவந்தாங்கலில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்த அவர் விவசாயம் நலிவடைந்ததால் சென்னைக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று புண்ணியகுமார் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்பு அவர் திடீரென தனது மேலாடையை களைந்து, கோவணத்துடன் காந்தி சிலை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயத்தை காக்க வேண்டும் எனக்கூறி அவர் கோஷங்களை எழுப்பியபடி சென்றார்.
கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் இதை கூடி நின்று பார்த்தனர். இதைக்கண்ட போலீசார் காந்தி சிலை அருகே புண்ணியகுமாரை மடக்கிப்பிடித்து மெரினா போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்துவிட்டு அவரை அனுப்பி வைத்தனர். #CauveryManagementBoard #MarinaBeach
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X