search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாகப்பா நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    யாகப்பா நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

    யாகப்பா நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த 2 மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை யாகப்பா நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அந்தப்பகுதியில் மிட்டாய் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுஜாதா (வயது 42).

    நேற்று இரவு இவர் அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென்று சுஜாதா அணிந்திருந்த  நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×