என் மலர்
செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் முதியவர் பிணம்- போலீஸ் விசாரணை
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், தொட்டியபாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முதியவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த முதியவர் வெள்ளை நிற அரைக்கை சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்தார். அவரது வலது மார்பில் இடது பக்கம் ஒரு மச்சம் உள்ளது.
இடது மார்பின் விலா எலும்பில் ஒரு மச்சமும், வலது பக்க தொடையில் காயத்தழும்பும் உள்ளது. அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து கிடந்த முதியவர் ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






