என் மலர்
செய்திகள்

இறந்தவர்உடலை அடக்கம்செய்வது தொடர்பாகபோராட்டம் நடத்தியவர்களிடம் தாசில்தார் வீரலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார்
சென்னிமலை அருகே 6 மணி நேரம் பிணத்துடன் பொதுமக்கள் போராட்டம்
சென்னிமலை அருகே உள்ள கிராமத்தில் இறந்தவரின் உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 6 மணி நேரம் பிணத்துடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள குமாரவலசு ஊராட்சியை சார்ந்த தொட்டிபாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் குருசாமி (வயது 65).
இவருக்கு நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார். நேற்று காலை 9 மணிக்கு வெள்ளோட்டில் இருந்து அனுமன்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஊர் நத்தம் பகுதியில் இப்பகுதி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் புதைப்பதற்காக உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர்.
அப்போது இந்த இடத்தில் சுடுகாடு அமையக்கூடாது என நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதாகவும், அங்கே புதைக்க கூடாது என அப்பகுதியை சார்ந்தவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்படவே பெருந்துறை டி. எஸ்.பி. பொறுப்பு ரமேஷ், பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம், தாசில்தார் வீரலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
காலை 9 மணி முதல் தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் அடக்கம் செய்ய வந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டது.
பின்னர் அப்பகுதியை சார்ந்த சென்னிமலை திமுக ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் என்கிற மணி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மதியம் 2:00 மணியளவில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இந்த முறை நெடுஞ்சாலை ஓரத்தில் பிணத்தை தற்காலிகமாக புதைப்பது எனவும், விரைவில் நீதிமன்ற விவகாரங்களை முடித்து ஊர் நத்தம் பகுதியை சுடுகாடாக மாற்றி தருவது என தாசில்தார் வீரலட்சுமி உறுதியளித்ததை ஏற்றுக்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. காலை முதல் இறந்தவர் உடலை வைத்து 6 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் வெள்ளோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
சென்னிமலை அருகே உள்ள குமாரவலசு ஊராட்சியை சார்ந்த தொட்டிபாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் குருசாமி (வயது 65).
இவருக்கு நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார். நேற்று காலை 9 மணிக்கு வெள்ளோட்டில் இருந்து அனுமன்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஊர் நத்தம் பகுதியில் இப்பகுதி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் புதைப்பதற்காக உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர்.
அப்போது இந்த இடத்தில் சுடுகாடு அமையக்கூடாது என நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதாகவும், அங்கே புதைக்க கூடாது என அப்பகுதியை சார்ந்தவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்படவே பெருந்துறை டி. எஸ்.பி. பொறுப்பு ரமேஷ், பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம், தாசில்தார் வீரலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
காலை 9 மணி முதல் தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் அடக்கம் செய்ய வந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டது.
பின்னர் அப்பகுதியை சார்ந்த சென்னிமலை திமுக ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் என்கிற மணி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மதியம் 2:00 மணியளவில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இந்த முறை நெடுஞ்சாலை ஓரத்தில் பிணத்தை தற்காலிகமாக புதைப்பது எனவும், விரைவில் நீதிமன்ற விவகாரங்களை முடித்து ஊர் நத்தம் பகுதியை சுடுகாடாக மாற்றி தருவது என தாசில்தார் வீரலட்சுமி உறுதியளித்ததை ஏற்றுக்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. காலை முதல் இறந்தவர் உடலை வைத்து 6 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் வெள்ளோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Next Story






