என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை அருகே தொழிலாளி கொலை- தோட்ட உரிமையாளர் கைது
    X

    சிவகங்கை அருகே தொழிலாளி கொலை- தோட்ட உரிமையாளர் கைது

    சிவகங்கை அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தோட்ட உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது33). இவருக்கு சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள நகரம்பட்டி கிராமத்தில் சொந்தமாக தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தை மேலூர் கோட்டநத்தம் பட்டியை சேர்ந்த கருப்பையா (56), அவரது மகன் ராஜா (37) ஆகியோர் பராமரித்து வந்தனர். சுந்தரேசன் நகரம்பட்டிக்கு வரும்போது ராஜாவுடன் மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று இருவரும் தோட்டத்தில் மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    அப்போது சுந்தரேசன் தனது கைலியால் ராஜாவின் கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மதகுபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து சுந்தரேசனை கைது செய்தார். #Tamilnews

    Next Story
    ×