என் மலர்
செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அதிகரிக்கப்படுமா?- செங்கோட்டையன் பேட்டி
கோபி:
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கோபியில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தாலும் ஒவ்வொரு பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்க சொல்லி உள்ளாட்சித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விழாவில் சங்கத்தினர் கூறிய கோரிக்கைகள் முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் எடுத்து சொல்லப்படும்.
வறட்சி திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் ஆயத்த மாகி உள்ளோம். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள் என்பது கோடை வெப்பத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும்.
வெப்பம் குறைந்தால் ஆண்டு தோறும் விடுமுறை விடுவது போல விடுமுறை விடப்படும். கூடுதலாக வெப்பம் இருந்தால் பெற்றோர் கோரிக்கை வைத்தால் முதல்வருடன் கலந்து ஆலோசித்து கூடுதல் நாட்கள் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் தனியார் மழலை பள்ளிகளில் பாடத் திட்டங்கள் உள்ளது போல அங்கன் வாடி குழந்தைகளுக்கும் பாடத்திட்டம் உருவாக்கப்படுமா? என்று கேட்டபோது, ‘‘இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். #tamilnews #ministersengottaiyan #schoolstudent #summerholiday






