என் மலர்
செய்திகள்

ஈரோடு பஸ் நிலையத்தில் தனியார் பஸ் மோதி தொழிலாளி பலி
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி வலசு, சங்குநகர் சாலை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 50). கூலி தொழிலாளி. வெங்கடேஷ் நேற்று இரவு வேலையை முடித்து கொண்டு ஈரோடு பஸ் நிலையத்தில் சூரம்பட்டி வலசுக்கு செல்லும் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு டவுன் பஸ் ரேக்கில் ஒரு தனியார் பஸ்சை நிறுத்துவதற்காக டிரைவர் பின்னோக்கி இயக்கினார் . வெங்கடேஷ் பஸ் வருவதை கவனிக்காமல் சென்றார். இதனால் பஸ் வெங்கடேஷ் மீது மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்காக போராடினார்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெங்கடேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






