என் மலர்
செய்திகள்

அரியலூரில் கனமழை: 2 வீடுகள் இடிந்து சேதம்
அரியலூர் மாவட்டத்தில் நேற்றிரவு கன மழை பெய்ததில் 2 வீடுகள் இடிந்து விழுந்தது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்றிரவு கன மழை பெய்தது. இன்று காலை லேசான தூரலுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் ஆறாக ஓடியது. இந்த மழையின் காரணமாக செந்துறை அருகேயுள்ள பெரியகுறிஞ்சியை சேர்ந்த மலர்கொடி என்பவரின் குடிசை வீடும், சொக்கநாத புரத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
அரியலூர்-25, ஜெயங்கொண்டம்-36, திருமானூர்-14, செந்துறை-3.
Next Story






