search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு இடிந்து விழுந்தது"

    • தொகுப்பு வீடுகள் 1990-ம் ஆண்டில் கட்டப்பட்டவை. இந்த வீடுகள் கட்டப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
    • கடந்த 2021-ம் ஆண்டில் பெருமழை, வெள்ளம் வந்தபோது கட்டிடங்கள் அதிகளவில் சேதமடைந்தன.

    மதுரை:

    மேலூர் அருகே மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய்பட்டி பகுதியில் 1,990-ல் கட்டப்பட்ட காலனி தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு அந்தப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது முத்து புளியம்மாள் என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த முத்து புளியம்மாளின் 5 வயது மகன் சேவுகமூர்த்தி காயமடைந்தார். முத்து புளியம்மாளும், அவரது மகளும் காயமின்றி தப்பினர். சேவுகமூர்த்தி மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த டி.ஆர்.ஓ. சக்திவேல், ஆர்.டி.ஓ. ஜெயந்தி, மேலூர் தாசில்தார் செந்தாமரை, கொட்டாம்பட்டி யூனியன் அலுவலர்கள், மேலவளவு ஊராட்சி மன்றத்தலைவர் தங்கமலைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    அப்போது பொதுமக்கள் தொகுப்பு வீடுகள் தற்போது சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    அதனை கேட்டுக்கொண்ட அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    இங்குள்ள தொகுப்பு வீடுகள் 1990-ம் ஆண்டில் கட்டப்பட்டவை. இந்த வீடுகள் கட்டப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதனால் கட்டிடம் சேதமடைந்து பல வீடுகளில் மேற்கூரைகள் சுவர்கள் இடியும் நிலையில் உள்ளன. அதனால் இங்கு வசிப்பவர்கள் எந்த நேரமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டில் பெருமழை, வெள்ளம் வந்தபோது கட்டிடங்கள் அதிகளவில் சேதமடைந்தன. அப்போது அங்கு வசிப்பவர்களை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தங்க வைத்தனர். பின்னர் வெள்ளம் வடிந்தபின்பு மீண்டும் வீடுகளுக்கு வந்தோம். அப்போது முதல் கட்டிடங்கள் உறுதி தன்மையற்ற நிலையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் புதிய வீடுகள் கட்டித்தரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    எனவே பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னதாக உயர் அதிகாரிகள் இங்குள்ள தொகுப்பு வீடுகளை பார்வையிட்டு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால் ஒரு ஓட்டு வீடு சேதம் ஏற்பட்டு வீட்டை வெள்ளம் சூழ்ந்து திடீரென இடிந்து விழுந்தது.
    • இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன் மற்றும் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சேதமான பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    பவானி:

    மேட்டூர் அணை நிரம்பி யதை யொட்டி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    இதேபோல் அம்மா பேட்டை, பவானி பகுதி களில் உள்ள காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

    இதையொட்டி பவானி மற்றும் அம்மா பேட்டை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் குடியிருந்த பொதுமக்கள் அருகே உள்ள பள்ளி மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்த ஒரு சில வீடுகள் பாதிப்பு அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் பவானி பாலக்கரை பகுதியை சேவர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி முனிரத்தினம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வீடு பாலக்கரை பகுதியில் காவிரி கரை யோரம் அமைந்துள்ளது.

    ஆற்றில் அதிகளவவு தண்ணீர் செல்வதால் இவர் களது வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது. இதையொட்டி அவர்கள் ௪ பேரும் அருகே உள்ள ஒரு முகாமில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால் அவர்களது வீடு ஓட்டு வீடு என்பதால் சேதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அவர்களது வீடு வெள்ளம் சூழ்ந்து திடீரென இடிந்து விழுந்தது. அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்ட தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன் மற்றும் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சேதமான பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    ×