என் மலர்
செய்திகள்

புதுச்சேரி டி.ஜி.பி, போலீஸ் சூப்பிரண்டு ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்த கோரும் வழக்கில் டி.ஜி.பி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வன்முறை இல்லாத அமைதியான சூழலை ஏற்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வினோத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த 2015-ம் ஆண்டு முதல் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் எத்தனை மோதல்கள் நடைபெற்றுள்ளன? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன? என்று நீதிபதி கிருபாகரன் கேள்விகளை எழுப்பினார்.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக புதுவை டி.ஜி.பி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வரும் 7-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வன்முறை இல்லாத அமைதியான சூழலை ஏற்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வினோத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த 2015-ம் ஆண்டு முதல் புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் எத்தனை மோதல்கள் நடைபெற்றுள்ளன? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன? என்று நீதிபதி கிருபாகரன் கேள்விகளை எழுப்பினார்.
மேலும், இவ்வழக்கு தொடர்பாக புதுவை டி.ஜி.பி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வரும் 7-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story