என் மலர்
செய்திகள்

முடிச்சூரில் 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது: கரையோர மக்கள் வீடுகளை காலி செய்தனர்
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், அன்னை அஞ்சுகம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
தாம்பரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. ஒரு நாள் மழைக்கே புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையின் இருபுறத்தையும் தொட்டவாறு தண்ணீர் கரைப்புரண்டு ஓடுகிறது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அடையாறு ஆற்றை ஒட்டி கரையோரத்தில் உள்ள முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர், சி.டி.ஓ. காலனி பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
முடிச்சூர், வரதராஜபுரம், சமத்துவ பெரியார் நகர், அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து உறவினர் வீடுகளுக்கு மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு செல்கிறார்கள்.
கடந்த 2015-ம் ஆண்டு பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது முடிச்சூர், பெருங்களத்தூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது ஒரு நாள் பெய்த மழைக்கே மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து இருப்பதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சேலையூரை அடுத்த திருவஞ்சேரி மப்பேடு, ராஜகீழ்பாக்கம், திருமலை நகர், சிட்லப்பாக்கம், பொழிச்சலூர், அனகாப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் தெருக்களில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தாழ்வான இடங்களான ஜோதிநகர், சத்யமூர்த்தி நகர், முருகப்பா நகர், ஜெய்ஹிந்த் நகரில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் நிற்கிறது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து உள்ளது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
ஜோதி நகரில் உள்ள பிரதான மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் மழை வெள்ளம் செல்ல வழியில்லாம் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது.
ஜோதி நகர் அருகே மணலி விரைவுச் சாலையில் மழைநீர் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அவ்வழியே வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதே போல் ராஜாஜி நகரில் 100 வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது.
கடல் சீற்றமாக காணப்படுவதால் திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் பைபர் படகு, கட்டுமர படகுகளில் செல்லும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. இதையடுத்து பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. குறைவான ஊழியர்களே சில தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
தொழிற்சாலையில் தேங்கி உள்ள நீரை மண்டல உதவி ஆணையாளர் பால சுப்பிரமணியன், அலெக்ஸ் சாண்டர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மோட்டார் மூலம் மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற வழி தெரியாத சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து கழிவு நீரை வெளியேற்றினர்.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீண்டும் ஜே.சி.பி. மூலம் கரையை மூடினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் அம்பத்தூர் மண்டல உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம், மத்திய கோட்ட துணை ஆணையர் சுப்புராஜ், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஏரியின் கரையை உடைத்து மீண்டும் கழிவு நீரை கொரட்டூர் ஏரிக்குள் விட்டனர்.
மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக முறையான வடிகால் கால்வாயும், கழிவு நீர் கால்வாயும் தனித்தனியாக அமைத்து முறையாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது. ஒரு நாள் மழைக்கே புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையின் இருபுறத்தையும் தொட்டவாறு தண்ணீர் கரைப்புரண்டு ஓடுகிறது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அடையாறு ஆற்றை ஒட்டி கரையோரத்தில் உள்ள முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவ பெரியார் நகர், சி.டி.ஓ. காலனி பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
முடிச்சூர், வரதராஜபுரம், சமத்துவ பெரியார் நகர், அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து உறவினர் வீடுகளுக்கு மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு செல்கிறார்கள்.
கடந்த 2015-ம் ஆண்டு பெரும் வெள்ளம் ஏற்பட்ட போது முடிச்சூர், பெருங்களத்தூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது ஒரு நாள் பெய்த மழைக்கே மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து இருப்பதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சேலையூரை அடுத்த திருவஞ்சேரி மப்பேடு, ராஜகீழ்பாக்கம், திருமலை நகர், சிட்லப்பாக்கம், பொழிச்சலூர், அனகாப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் தெருக்களில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது.
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் தாழ்வான இடங்களான ஜோதிநகர், சத்யமூர்த்தி நகர், முருகப்பா நகர், ஜெய்ஹிந்த் நகரில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் நிற்கிறது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து உள்ளது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
ஜோதி நகரில் உள்ள பிரதான மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் மழை வெள்ளம் செல்ல வழியில்லாம் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது.
ஜோதி நகர் அருகே மணலி விரைவுச் சாலையில் மழைநீர் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அவ்வழியே வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதே போல் ராஜாஜி நகரில் 100 வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது.
கடல் சீற்றமாக காணப்படுவதால் திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் பைபர் படகு, கட்டுமர படகுகளில் செல்லும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. இதையடுத்து பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. குறைவான ஊழியர்களே சில தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
தொழிற்சாலையில் தேங்கி உள்ள நீரை மண்டல உதவி ஆணையாளர் பால சுப்பிரமணியன், அலெக்ஸ் சாண்டர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மோட்டார் மூலம் மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன், கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற வழி தெரியாத சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து கழிவு நீரை வெளியேற்றினர்.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீண்டும் ஜே.சி.பி. மூலம் கரையை மூடினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் அம்பத்தூர் மண்டல உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம், மத்திய கோட்ட துணை ஆணையர் சுப்புராஜ், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஏரியின் கரையை உடைத்து மீண்டும் கழிவு நீரை கொரட்டூர் ஏரிக்குள் விட்டனர்.
மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக முறையான வடிகால் கால்வாயும், கழிவு நீர் கால்வாயும் தனித்தனியாக அமைத்து முறையாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






