என் மலர்
செய்திகள்

தர்மபுரி அருகே சலூன் கடைக்காரர் தற்கொலை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் லலிகம், நாவிதர் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மகேஸ்வரியின் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து மனைவியின் வீட்டில் தங்கியிருந்த அவர், அங்குள்ள வெள்ளக்கல் பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த 27-ந்தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த செல்வம் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.