என் மலர்
செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே 2 கோவில்களில் நகை-பணம் கொள்ளை
காட்டுமன்னார்கோவில் அருகே ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது பழஞ்சநல்லூர். இங்கு காளியம்மன், செல்லியம்மன் கோவில்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரி பூஜை முடிந்ததும் இரவு கதவுகளை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
கோவிலின் நிர்வாகி பாண்டியன் என்பவர் நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது செல்லியம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி வேல், வெள்ளி பிரம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் திருடப்பட்டிருந்தது. மேலும் கோவில் முன்புள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
அதுபோல் அருகில் உள்ள காளியம்மன்கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க செயின் திருடு போய் இருந்தது. கோவில் முன்பு இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மொத்தம் இந்த 2 கோவில்களிலும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளைபோய் இருந்தது.
இந்த துணிகர கொள்ளைசம்பவம் குறித்து பாண்டியன் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நகை, பணம் கொள்ளைபோன 2 கோவில்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது பழஞ்சநல்லூர். இங்கு காளியம்மன், செல்லியம்மன் கோவில்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரி பூஜை முடிந்ததும் இரவு கதவுகளை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
கோவிலின் நிர்வாகி பாண்டியன் என்பவர் நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது செல்லியம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி வேல், வெள்ளி பிரம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் திருடப்பட்டிருந்தது. மேலும் கோவில் முன்புள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
அதுபோல் அருகில் உள்ள காளியம்மன்கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க செயின் திருடு போய் இருந்தது. கோவில் முன்பு இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மொத்தம் இந்த 2 கோவில்களிலும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளைபோய் இருந்தது.
இந்த துணிகர கொள்ளைசம்பவம் குறித்து பாண்டியன் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நகை, பணம் கொள்ளைபோன 2 கோவில்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






