என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் கண்பார்வை குறைந்ததால் பள்ளி மாணவி தற்கொலை
காஞ்சீபுரத்தில் கண்பார்வை குறைந்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். நெசவுத் தொழிலாளி. இவரது மகள் மஞ்சுளா (வயது 16). தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
மாணவி மஞ்சுளாவுக்கு கண்பார்வையில் குறைபாடு இருந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை.
இந்த நிலையில் கண் பார்வையை பரிசோதித்த போது அவர் குணமடைய வாய்ப்பு குறைவே என்று தெரிய வந்தது. இதனால் மஞ்சுளா வேதனையில் இருந்தார்.
இன்று காலை பெற்றோர் வெளியில் சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீடு திரும்பிய பெற்றோர், மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார் மாணவியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். நெசவுத் தொழிலாளி. இவரது மகள் மஞ்சுளா (வயது 16). தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
மாணவி மஞ்சுளாவுக்கு கண்பார்வையில் குறைபாடு இருந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை.
இந்த நிலையில் கண் பார்வையை பரிசோதித்த போது அவர் குணமடைய வாய்ப்பு குறைவே என்று தெரிய வந்தது. இதனால் மஞ்சுளா வேதனையில் இருந்தார்.
இன்று காலை பெற்றோர் வெளியில் சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீடு திரும்பிய பெற்றோர், மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார் மாணவியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story






