என் மலர்
செய்திகள்

செம்பனார்கோவில் - மயிலாடுதுறையில் சாலை மேம்பாட்டு பணிகள்: கலெக்டர் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்படுத்தும் பணிகள் மற்றும் பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்படுத்தும் பணிகள் மற்றும் பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டார்.
தரங்கம்பாடி- மயிலாடுதுறை சாலையில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகளையும், மயிலாடுதுறை-பட்டவர்த்தி சாலையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகளையும், கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு, சாலைகளின் வளைவுகளில் எச்சரிக்கைக் குறியீடுகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மாப்படுகை-கடலங்குடி இணைப்புச் சாலையில் மண்ணியாற்றின் குறுக்கே ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பாலம் திரும்பக் கட்டும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்டப் பொறியாளர் (மயிலாடுதுறை) ராஜேந்திரன், உதவி கோட்டப் பொறியாளர் (சீர்காழி) சூரியமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் காந்திமதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்படுத்தும் பணிகள் மற்றும் பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டார்.
தரங்கம்பாடி- மயிலாடுதுறை சாலையில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகளையும், மயிலாடுதுறை-பட்டவர்த்தி சாலையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகளையும், கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு, சாலைகளின் வளைவுகளில் எச்சரிக்கைக் குறியீடுகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மாப்படுகை-கடலங்குடி இணைப்புச் சாலையில் மண்ணியாற்றின் குறுக்கே ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பாலம் திரும்பக் கட்டும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்டப் பொறியாளர் (மயிலாடுதுறை) ராஜேந்திரன், உதவி கோட்டப் பொறியாளர் (சீர்காழி) சூரியமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் காந்திமதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story






